×

பெரியகுளத்தில் கடனை கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு

 

பெரியகுளம், மே 3: பெரியகுளத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்கள் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியகுளம் வடகரையில் உள்ள சித்தேஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சையது ராபியா (39). இவரது கணவர் தனியார் மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார்.

இவர், தனது வீட்டின் அருகில் குடியிருந்த சித்திக் (45) என்பவருக்கு ரூ.3 லட்சம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறிது நாட்கள் கழித்து சித்திக் பெரியகுளம் வடகரை பள்ளிவாசல் மேற்கு தெரு பகுதிக்கு குடிபெயர்ந்து சென்று விட்டார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் ராபியா, சித்திக் வீட்டிற்கு சென்று பணம் கேட்டதாகவும், அப்போது பணம் தர முடியாது என கூறி வீட்டிலிருந்தவர்கள் ராபியாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த அவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில், சித்திக் மற்றும் அவரது மனைவி முகமதா (40), மகள் ஆப்ரின் (21), மகன் உமர் அப்துல்லா (23), ஜலால் (25) ஆகியோர் மீது பெரியகுளம் வடகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

The post பெரியகுளத்தில் கடனை கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Chitheswaran temple street ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால்...